tamilnadu

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதியிழப்பு

சென்னை, ஆக. 8 - ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னதாக 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகச் சொல்லி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஒலிம்பிக் போட்டிக்குள் நுழைவதும், இறுதிப் போட்டிக்கு தகுதியாவதும் மிகப்பெரிய சவாலான விஷயங்கள். மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்தவ ராக இருந்தாலும் இந்த சவால்களை முறி யடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றி ருந்தார். இந்திய நாடே அவர் தங்கம்  வெல்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தகுதி இழப்பு செய்தது பேரிடியாய் இறங்கியது. தற்போது போட்டிகளிலிருந்து விலகுவதாக வேதனையுடன் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதியிழப்பு குறித்து, சக விளையாட்டு வீரர்கள், பொதுமக்களின் மத்தியல் எழுந்துள்ள ஐயங்களுக்கு பாஜக அரசு பதிலளிக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

பாஜக எம்.பி.க்கு எதிராக வீராங்கனைகள் போராட்டம்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பல மாதங்களாக மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த சம்மேள னத்தின் அன்றைய தலைவராகவும், பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென போராடி வந்தனர். ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் அதை முற்றிலும் நிராகரித்ததோடு பிரிஜ்பூஷன் சரண்சிங்கிற்கு ஆதரவாகவே இருந்து வந்தது.

பாலியல் குற்றச்சாட்டை அலட்சியம் செய்த மோடி அரசு

ஒரு கட்டத்தில் தாங்கள் பெற்ற பதக்கங் களை எல்லாம் கங்கை நதியில் வீசிவிடப் போவதாக வீராங்கனைகள் அறிவித்தனர். இந்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலை பாத்திரம் வகித்தவர் என்பது நினைவு கொள்ளத்தக்கது. வீராங்கனை களை ஒடுக்குவதில் குறியாக இருந்த ஒன்றிய அரசாங்கம் பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக சுட்டுவிரலைக் கூட அசைக்க வில்லை என்பது நாடறிந்ததே.

இந்நிலையில்தான் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் நடந்திருப்பதும், அதைத் தொடர்ந்த ஒன்றிய அரசாங்கத்தின் மவுன மும் ‘தகுதி நீக்கம் சதியாக இருக்குமோ?’ என்கிற சந்தேகத்தை வலுவாக எழுப்பி யுள்ளது. 

தட்டிப் பறிக்கப்பட்ட சாதனை; பின்னணியில் சதி வேலை?

100 கிராம் எடைக்குறைப்பு என்பது சாத்தியமற்றதல்ல என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர். போட்டி துவங்க இருந்த நேரத்தில் எடை பிரச்சனையை கிளப்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டதும், இதனை எதிர்த்து முறையாக அவகாசம் கேட்க பயிற்சியா ளர் தவறியது போன்ற காரணங்களாலும் இந்திய நாடு அடைய இருந்த பெருமை யும், வினேஷ் போகத் வரலாற்று சாதனை யும் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனங்கள் எழும்பியுள்ளன. வினேஷ் போகத் தகுதி இழப்பு செய்யப் பட்டதையொட்டி கருத்து தெரிவித்துள்ள விளையாட்டு வீரர்களும், அரசியல் கட்சிகளும் தகுதி நீக்கத்திற்கு பின்னே சதி  இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பி யுள்ளனர். எழும்பியுள்ள கொந்தளிப்பான சூழ்நிலைக்கு ஒன்றிய பாஜக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

வினேஷ் போகத்  உண்மையான வீராங்கனை!

எனவே, இப்பிரச்சனை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் முறையீடுகளைச் செய்து வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க போதுமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் விளையாட்டு வீரர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ள ஐயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். 

தகுதி இழப்பு செய்யப்பட்டாலும் வினேஷ் போகத் உண்மையான வீராங்கனை என்ற பெருமைக்குரியவராவார். அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக் களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.