tamilnadu

img

ரூ.22 லட்சத்தில் பணிகள் தொடக்கம்

சென்னை, மார்ச் 12 - சென்னை மாநகராட்சியில் உள்ள விசா லாட்சி தோட்டம், குருபுரம் பகுதிகளில் ரூ. 22 லட்சம்  மதிப்பீட்டிலான பணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வார்டு உறுப்பினர் எம்.சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

123வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து விசாலாட்சி தோட்டம் குடிசை மாற்று வாரிய குடி யிருப்பு பகுதியில் ரூ8.58 லட்சம்  மதிப்பீட் டில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப் படுகிறது.

குருபுரம் பகுதியில் உள்ள பன்நோக்கு கட்டிடத்தின் மேற்கூரை அமைத்தல், மேம் படுத்துதல் பணிகள் ரூ13.32 லட்சம் மதிப் பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பணிகளை திங்களன்று (மார்ச் 11)  வார்டு உறுப்பினர் எம்.சரஸ்வதி தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதி குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ், திமுக வட்டச் செயலாளர் மு. ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்த னர்.