வட மாநிலங்களான பீகார், உத்த ரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநி லங்களில் சாத் பூஜை என்ற பண்டிகை நவம் பர் மாதத்தில் கொண்டா டப்படுவது வழக்கம். 4 நாட்கள் நடை பெறும் இந்த பண்டி கையின் போது விரதம் இருக்கும் பெண் கள் விரதம் முடிவதை ஒட்டி நீர்நிலை களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு கள் நடத்துகின்றனர். புலம்பெயர் தொழி லாளர்கள் பணிபுரிந்து வருவதால் தில்லி மாநிலத்தில் யமுனை நதியில் சாத் பண் டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் யமுனை நதியில் கழிவு நீர் கலப்ப தால் 6 அடி உயரத்திற்கு ரசாயன நுரை கள் எழுப்பியுள்ளன. வேறு வழியில்லா மல் அந்த 6 அடி ரசாயன நுரைகளுக்கு இடையே சாத் பூஜையை பெண்கள் செய்து வருகின்றனர்.
இந்த நுரைகள் உடலில் பட்டால் எரிச்சல், சொறி ஆகியவை ஏற்படுவ தோடு, அருகில் நிற்பவர்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது என சாத் பூஜைக்கு சென்று வந்த பெண்கள் குற்றம்சாட்டு கின்றனர். இந்நிலையில், ஆளும் ஆம் ஆத்மி மற்றும் ஒன்றிய பாஜக அரசுகள் எதையும் கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருகின்றன.