tamilnadu

img

பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு ஏன்?அமைச்சர் விளக்கம்

சென்னை, ஆக.14- அரசு பாடப்புத்தகங்களின் விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

விலை உயர்ந்தது ஏன்? என்று விளக்கம் அளித்துள்ள  அமைச்சர், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற் கான உற்பத்தி பொருட்கள் காகிதம் மற்றும் மேல் அட்டை களின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வரு கிறது. 2018-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது காகிதம் விலை 63 விழுக்காட்டிற்கு கூடுதலாகவும், அட்டை விலை 33 விழுக்காடும் மற்றும் அச்சுக்கூலி 21 விழுக்காடும் உயர்ந்துள்ளது. எனவே அந்த விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையில் பள்ளிப் பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டு உள்ளது.

எனவே, இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற் காக உயர்த்தப்படவில்லை. பாட புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவை கள் விலை உயர்வின் காரணமாக பாட புத்தகம் தயா ரிப்பதற்கான செலவை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.