பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது அவசியம். அபராதம் விதித்து கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற மனநிலைக்கு வரக்கூடாது தற்போது ஒருநபர் தொற்று மட்டுமே பெரிய அளவில் கண்டறியப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதங்களை விட தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 3000 இருந்த கொரோனா தொற்று நேற்று 4000 த்தை கடந்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் தூத்தூக்குடி, திருப்பூரில் சேர்த்து மொத்தம் 2 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே காரைக்காலில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.