சென்னை, பிப். 24 - தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவ தாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமை யில் தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணை யர்கள் தர்மேந்திர சர்மா, நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர் கள் அஜய் பதூ, மனோஜ் குமார் சாகு, ஊடகப் பிரிவு தலைமை இயக்குநர் பி.நாராயணன், தலைமை இணை இயக்குநர் அனுஜ் சந்தக், முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் சென்னை வந்தனர். இவர்கள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில், சனிக்கிழமை (பிப்.24) செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறிய தாவது:
தேசிய, மாநிலக் கட்சிகள், அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தியுள் ளோம். மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக் கப்பட்டது.
பணப் பட்டுவாடாவை அனுமதிக்க மாட்டோம்
வாக்காளர்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும். பணப்பட்டு வாடாவை தடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் உறுதி அளித்துள்ளோம். பணப் பட்டுவாடாவை ஒருபோதும் அனு மதிக்க மாட்டோம். அதை பொறுத்துக் கொள்ளவும் மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறோம்.
புதிய செயலி உருவாக்கம்
தேர்தலை நியாயமாகவும், சுதந்தி ரமாகவும் நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது. தேர்தல் தொடர்பான புகார்களை ஆணையத்திடம் பொது மக்கள் தெரிவிக்கும் வகையில் சி- விஜில் செயலி உருவாக்கப் பட்டுள்ளது. இதில் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
7 நாட்களுக்கு முன்பு பூத் சிலிப்
தமிழ்நாட்டில் மொத்தம் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்க ளில் ஆண்கள் 3.04 கோடி, பெண்கள் 3.15 கோடி பேர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 8294. பெண் வாக்கா ளர்களே இங்கு அதிகமாக உள்ளனர். புதிய வாக்காளர் 9.18 லட்சம் பேர் உள்ளனர்.
வாக்குச் சாவடியில் 66 விழுக்காடு வெப் காஸ்டிங் செய்யப்படும். ஒரு வங்கி கணக்கில் இருந்து பலருக்கு பணம் பட்டுவாடா செய்தால் அதை கண்காணிக்கும் வசதி உள்ளது. தேர்த லின்போது அனைத்து வாக்குச்சா வடிகளிலும் அடிப்படை வசதிகள் இருப்பது உறுதி செய்யப்படும். தேர்தலுக்கு 7 நாட்களுக்கு முன்பு வரை பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்யப் படும்.
கண்காணிப்பு தீவிரம்
ஜனநாயக முறையில் வெளிப்ப டையாக தேர்தலை நடத்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லை களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் படும். 17 மாவட்டங்களில் உள்ள 145 எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். விமான நிலை யங்கள் தீவிரமாக கண்காணிக் கப்படும். பதற்றமான வாக்குச்சாவ டிகள் கண்டறியப்பட்டு துணை ராணுவப் படை கண்காணிப்பு உறுதிப் படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்வி களுக்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், “தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கட்சிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். ஆன் லைன் பணப் பரிவர்த்தனைகளும் கண் காணிக்கப்படும்; தேர்தலின்போது ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.