குடும்பத்தினருடன் சென்ற வாக்களித்த தமிழச்சி தங்கபாண்டியன்
தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் நீலாங்கரை அரசுப்பள்ளியில் தனது குடும்பத்தினருடன் சென்ற வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் குடும்பத்துடன் செல்ஃபி
மத்தியசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதமாறன் நந்தனம் அரசுப்பள்ளி வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பெருமைமிகு குடிமக்கள் என்ற தேர்தல் ஆணையத்தின் செல்ஃபி பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
டி.ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி வாக்களிப்பு
திமுக பொருளாளரும், திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான டி.ஆர்.பாலு, கோடம்பாக்கம் பத்திமா மெட்ரிக் பள்ளி வாகுச்சாவடியில் வாக்களித்தார். வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதிவீராசாமி அண்ணநகரில் உள்ள வாக்குசாவடியிலும் வாக்களித்தனர்.
வணக்கம் சென்னை
சென்னையில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களித்தனர்.
நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சென்னை ஆதம்பாக்கம் புனித மாற்கு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வாக்களித்தனர்.
வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
சென்னை தி.நகர் தக்கர்பாபா வித்யாலயா பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த முதியவரை சக்கரநாற்காலியில் அழைத்துச் சென்ற ஊழியர்கள்
உற்சாகத்துடன் வாக்களித்த இளைய தலைமுறை
சென்னையில் இளையதலைமுறை வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்தனர்.
ராயப்பேட்டை மோனகன் பள்ளியில் இளம்தம்பதி வாக்களித்து விட்ட வந்தனர்.
வெறிச்சோடிய அண்ணாசலை
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததாலும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த காரணத்தாலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை அண்ணா சாலை பேருந்துகள் மற்றும் போதிய வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காட்சியளித்தது.