tamilnadu

img

தேவைப்பட்டால் கலைஞர் அரங்கத்தை பயன்படுத்து வோம்: ஆணையர்


சென்னை, ஏப்.14-
தேவைப்பட்டால் கலைஞர் அரங்கத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவோம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்த வரும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு எடுத்தவரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்து வருகிறது. திமுக தரப்பில் சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை வார்டாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அளித்த கடிதத்தை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
ஆனாலும், அரசுத் தரப்பில் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில், மாநகராட்சி தரப்பில் ஆணையர் பிரகாஷ், தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தையும் பயன்படுத்துவோம் என்றும் 3 அல்லது 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்ப டுத்தி தொற்று தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.