மாங்காடு,குன்றத்தூரில் பாதாள சாக்கடை திட்டம்
விடுபட்ட பகுதிகள் சேர்க்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு
மாங்காடு,குன்றத்தூர் நகராட்சிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் விடுபட்ட பகுதிகளையும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், மாங்காடு மற்றும் குன்றத்துர் நகராட்சிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டம் விடுபட்ட பகுதிகளை சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப் பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசுகையில்,“குன்றத்துர் அருகாமையில் உள்ள கெருகம்பாக்கம், இரண்டாம் கட்டளை, கொளப்பாக்கம், கொல்லச்சேரி, கோவூ, பழந்தண்டலம், பெரிய பணிச்சேரி,சிறுகளத்தூர், தண்ட லம், தரப்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய 11 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து நகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ள கழிவு நீரேற்று நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவைப்படின் விடுபட்ட பகுதிகளையும் சேர்த்துக்கொள்ளப்படும். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்காடு நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அருகில் உள்ள பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு ஆகிய நகராட்சிகளையும் இணைத்து செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.216.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. உறுப்பி னரின் கோரிக்கையை ஏற்று விடப் பட்ட பகுதிகளையும் சேர்த்துக்கொள்ளப் படும்”என்றார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலவலகத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேரிவு செய்யப்பட்ட 25 இளம் நிலை உதவியாளர் மற்றும் 47 பண வசூலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் தா.மோ. அன்பரன் வழங்கினார். வீட்டு வசதி நகர்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் காகர்லா உஷா, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.