tamilnadu

img

தமிழகத்தின் நிதியுரிமை, கல்வி உரிமையை மீட்க ‘இந்தியா’ கூட்டணியை ஆதரிப்பீர்!

கரூர், ஏப்.5- இந்தியா கூட்டணி சார்பில் கரூர்  மக்களவைத் தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட்பாளர் செ.  ஜோதிமணி, தஞ்சாவூர் மக்கள வைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச. முரசொலி ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசி யிருப்பதாவது:

ஒன்றிய பாஜக அரசை வீழ்த்தி  வீட்டுக்கு அனுப்புவதே நம் குறிக்  கோள். நூறு நாள் வேலைத் திட்டத்  தில், பணி நாட்களை 150 நாட்களாக  உயர்த்தி ஊதியம் ரூ. 400 ஆக வழங்கப்படும் என முதல்வர் வாக்  குறுதி கொடுத்துள்ளார். நிச்சயம் உங்களுக்கு முதல்வர் செய்து கொடுப்பார்.  

ஆனால், சமையல் எரிவாயு விலையை ரூ. 1200 வரை உயர்த்தி விட்டு, தற்போது தேர்தல் வரு வதால் சிலிண்டர் விலையில் ரூ.  100 குறைத்துள்ளார் மோடி. இதெல் லாம் நாடகம். தேர்தலுக்காக மட்  டுமே தமிழகத்திற்கு வந்து செல்கி றார் பிரதமர் மோடி. தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்  கள் ஒருவர்கூட டெபாசிட் வாங்க மாட்டார்கள். நாம் ஜிஎஸ்டி வரி யாக ஒரு ரூபாய் செலுத்தினால், அவர் திருப்பித் தருவது 29 பைசா தான். பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் ரூ. 1 ஜிஎஸ்டி வரி  செலுத்தினால், ரூ. 3 திருப்பிக் கொடுக்  கிறார். ஆனால் நமக்கு வெறும் 29  பைசாதான் கொடுக்கிறார். 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு 2019ஆம் ஆண்டில் பிர தமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுவரை அங்கு எந்தப் பணிகளும்  நடக்கவில்லை. ஆனால் பாஜக ஆளும் 5 மாநிலங்களில் எய்ம்ஸ்  கட்டுமானப் பணிகள் முடிந்து  செயல்பாட்டுக்கே வந்துவிட்டன. 

பாஜகவுடன் கூட்டணி வைத் துக் கொண்டு, அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தமி ழகத்தின் அனைத்து உரிமைகளை யும் விட்டுக் கொடுத்து விட்டார்.  எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாம்.  12 ஆம் வகுப்பு தேர்வு போதும் என்று சொன்னவர் கலைஞர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் கூட தமிழ்  நாட்டுக்குள் நீட் தேர்வு வரவில்லை.  அந்த அம்மையார் இறந்த பிறகு, அதிமுக அடிமை அமைச்சர்கள்  எல்லாம் சேர்ந்து பாஜகவின் அழுத்  தம் காரணமாக நீட் தேர்வை தமிழ்  நாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதன் விளைவாக 22 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். நம் மாநில  உரிமைகளை கடந்த 10 ஆண்டு களில் ஒன்றிய அரசிடம் அதிமுக  அடிமைகள் அடகு வைத்துவிட்டனர். 

எனவே, நம் மாநிலத்தின் நிதி யுரிமை, கல்வியுரிமையை மீட்க,  நீட் தேர்வு ரத்து செய்யப்படுவ தற்கு இந்தியா கூட்டணியை மக் கள் ஆதரிக்க வேண்டும்.