tamilnadu

img

போக்குவரத்து கழக ஊழியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டம்

போக்குவரத்து கழக ஊழியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டம்

விழுப்புரம், ஆக.22- பழைய ஓய்வூதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம், ஓய்வு பெற்ற ஊழியர் அமைப்பு சார்பில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு ஐந்தா வது நாளாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர்கள் சங்கம் மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல அமைப்பினர் ஏராளமா னோர் பங்கேற்றனர். திருவண்ணாமலை சிட்கோ பணிமனை முன்பு வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் சிஐ டியு மாவட்டத் தலைவர் காங்கேயன், மின் ஊழியர் மத்திய அமைப்பு சிவராஜ், சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.