tamilnadu

img

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வாலிபர் சங்கத்தினர் கைது

விழுப்புரம், ஜூன்.22- கள்ளசாராயத்தை ஒழிக்க வலியுறுத்தி சனிக் கிழமை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுட முயன்ற வாலிபர் சங்கத் தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் ஏற்பட்டுள்ள கள்ள சாராய  சாவுகளை அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வலியுறுத்தியும், கள்ளக் குறிச்சி கள்ளச் சாராய  சாவுகளுக்கு காரணமான வர்களை உடனடியாக கைது  செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தியும் சனிக்கிழமை (ஜூன் 22)   விழுப்புரம் மாவட்ட ஆட்சி யர் பெருந்திட்ட வளாகம் முன்பு வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமையில் திரளாக வாலிபர் சங்கத் தினர் அங்கு கூடினர். அப்போது அங்கு பாது காப்பு பணியில் இருந்த காவல்துறையினர் வாலிபர்  சங்கத்தினரை ஆர்ப்பாட்டத் தில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன் றனர்.  அப்போது வாலிபர்  சங்கத்தினருக்கும் காவல் துறையினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

அப்போது ஆர்ப்பாட்டத் தில் ஈடுபடுட முயன்ற மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், மாவட்டப் பொருளாளர் தேவநாதன், நிர்வாகி மதன்குமார், உட்பட ஏராளமானவரை போலீசார் கைது செய்தனர்.