tamilnadu

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ரூ. 98 லட்சம் ஒதுக்கீடு...

சென்னை:
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், “அண்மையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.அதனடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில், ஒன்பது உறுப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட துறையின் செயலாளர் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இக் குழுவினர் ஆறு மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இக்குழு அறிக்கை தயாரிப்பதற்காக, 98 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு ஒதுக் கீடு செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

;