tamilnadu

img

சக்கராசனத்தில் மூன்று உலக சாதனை படைப்பு

சக்கராசனத்தில் மூன்று உலக சாதனை படைப்பு

ருவள்ளூர், மே 14- கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த நரேஷ்குமார், லட்சுமி தம்பதியின் மகள் ந.இந்துஸ்ரீ, (வயது 9) அங்குள்ள மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், 5ஆம்வகுப்பு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையத்தில், யோகாசனம் பயின்று வருகிறார். நேராக நின்று, உடலை பின் நோக்கி வளைத்து தரையில் கைகளை வைத்தபடி நிற்பது சக்கராசனமாகும். சிறுமி இந்துஸ்ரீ, சக்கராசனத்தில், கைகளை தரைகளில் வைத்தபடி உடலை மட்டும், ஒரு நிமிடத்தில், 28 முறை சுழன்று சாதனை படைத்தார். இவரது சாதனை, இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ இன்டர்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’, வேல்ட்வயட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய 3 உலக சாதனை புத்தகங்க ளில் இடம் பிடித்தது.