tamilnadu

img

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஆறுதல்!

சென்னை, டிச.6 -மிக்ஜம் புயல் காரண மாக மூன்று நாட்கள் பெய்த மிக கன மழையால்  சென்னையில் சில இடங்க ளில் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக  அசோக் நகர், அரும்பாக்கம்,  வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.

அசோக் நகரில் பாரதிதா சன் காலனி உள் பகுதிகளில்,  குளம் போல் தண்ணீர் தேங்கி யுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. தேசிய பேரிடர் மீட்புப்  படையினர் 450 பேர் 18 குழுக் களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணி களில் ஈடுபட்டு வருகின்ற னர்.

பெருங்குடி பகுதியில் ஏரிப்பகுதி ஒட்டிய சோழிங் கநல்லூர் சட்டமன்றத் தொகு திக்குட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் நிவாரண உதவிகளை  வழங்கினார். பாய், பெட்ஷீட், 5 கிலோ அரிசி,  ஆவின் பால் பவுடர் ஒரு கிலோ கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிக்கான நியமிக்கப்பட்ட அமைச்சர் சி.வி.கணேசன், சோழிங்க நல்லூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், தென்சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

நேப்பியர் பாலம்
முன்னதாக, சென்னை  நேப்பியர் பாலம் அருகே  உள்ள கூவம் முகத்து வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கூவம் ஆற்றை பார்வையிட்டு சென்னையில் வெள்ளம் வடிவது குறித்து அதிகாரி களுடன் முதல்வர் கேட்டறிந் தார்.