tamilnadu

உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டை ஜீரணிக்க முடியாது

சென்னை, ஜூலை 29 - எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியின் போது, தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு ஒன்று, திங்களன்று விசாரணைக்கு வந்த நிலை யில், “உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது” என சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.

கழிவுகள் மூலமாக காற்றை, நிலத்தை, குடிநீரை பாழ்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 மே 22 அன்று அதிமுக ஆட்சியில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத் தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட னர். இந்த சம்பவம் அப்போது நாடு முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித  உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஜூலை 15 அன்று நீதிபதி கள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் செந்தில் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தபோது, இந்த சம்பவத்தில் அதிகாரிகள் எந்தத் தவறும் செய்ய வில்லை என சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல்  செய்யப்பட்டது.

அப்போது, “துப்பாக்கிச் சூடு குறித்த சிபிஐ விசாரணை சரியில்லை; அது ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளது என்று  குற்றம் சாட்டிய நீதிபதிகள்,  “முதலாளி களின் விருப்பத்திற்கு ஏற்பவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ளதாகவும், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர் புடைய காவல்துறை அதிகாரிகளின் சொத்து விபரங்களை கணக்கிடவும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது”

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், செந்தில் குமார்  அமர்வு முன்பு திங்களன்று (ஜூலை 29)  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது, காவல்துறையினர் உள்ளிட்ட அதி காரிகள் சொத்து விவரங்கள் குறித்த அறிக் கையை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று,  3 மாத கால அவகாசம் வழங்கிய நீதிபதி கள், “அதிகாரிகள் தங்கள் சொத்து விவ ரங்களை தெரிவிக்க வேண்டும்; அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வரு வாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை யினர் விசாரிக்க வேண்டும்; லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழ ங்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர். 

அத்துடன், “உயிருக்கு பயந்து ஓடிய  மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஜீரணித்துக்கொள்ள முடியாது” என்றும் காட்டமாக குறிப்பிட்ட நீதிபதிகள், “பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்த வழக்கை முடித்து வைத்தது எப்படி  நியாயம்?; ஒரு தனி நபரின் கட்டுப்பாட் டில் அரசு இயந்திரம் செயல்படுவது சமூ கத்துக்கு மோசமானது; தூத்துக்குடியில் அனுமதி இன்றி தொழிற்சாலை செயல் பட்டது அரசுக்கு தெரியும், இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.