“தமிழகத்திற்கு போதிய கால அவ காசம் வழங்காமல் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் (வாக் குச்சீட்டு முறை இருந்தபோது) அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகள், சட்ட சபைத் தேர்தல்களை ஒரே சமயத்தில் ஒரே நாளில் நடத்தியது நமது தேர்தல் ஆணை யம். மின்னணு வாக்குப்பதிவு வந்த பிறகு ஏழு கட்டமாக தேர்தலை நடத்த வேண்டியதன் அவசி யம் என்ன?வாக்குப் பதிவிற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஏன் 45 நாட்கள் இடை வெளி? இது வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது. வட இந்திய மாநிலங்களில் ஒரே மாநிலத்தில் ஏழு கட்டத் தேர்தல் நடத்து வது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரும், இதர தேர்தல் ஆணையர்களும் சங் பரிவார்களின் அரசிற்கு கட்டுப்பாட்டு செயல்படுகிறார்கள் என்கிற போது தேர்தல் ஆணையத்தின் மீது நம்பகத்தன்மை இல்லை. நம்பிக்கை இல்லை.
நாட்டைப் பாதுகாக்கும் கருத்தியல் யுத்தத் தேர்தல் இது. சூதும் சூழ்ச்சியும் நிறைந்த ஆட்சியாளர்களிடமிருந்து வாக்காளர்கள் தான் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். 100 சதவீத வாக்குப்பதிவு நடை பெறவேண்டும். தேர்தல் ஆணையத்தை நம்பி நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கவில்லை. மக்களை நம்பி தேர்தல் களம் காண்கிறோம்”.
தொல்.திருமாவளவன், விசிக தலைவர்