tamilnadu

பாடநூல்கள் விலை உயர்வை திரும்பப் பெறுக!

பள்ளி, கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் பாடநூல்கழகம், தமிழ்நாடு முழு வதும் உள்ள 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாட நூல்களின் விற்பனை விலையை ஒரேயடியாக ரூ.340 வரை (1130 ரூபாய் வரை) தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ளது.  

தமிழ்நாட்டில் மாணவர்களின் பாட நூல்களின் விலை உயர்வு என்பது தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை உயர்த்த நேரிடும். இ்த்தகைய கல்விக் கட்டண உயர்வு என்பது நடுத்தர மற்றும் விளிம்பு நிலை யில் உள்ள குடும்பங்களில் இருந்தே அதி களவில் மாணவர்கள் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர். சமூகத்தில் இருக்கும் பொருளாதார விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள மக்களின் மீது மேலும் சுமையை ஏற்றி அவர்கள் மேலும் மன உலைச்ச ளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பாடப்புத்தகங்களின் அட்டை மற்றும் காகிதத்தின் மீது உயர்த்தப்பட்ட வரி அதன் விலை உயர்வின் காரணமாகத் தான் பாட நூல்களின் விலை உயர்த்தப்பட்டது என்னும் பள்ளி கல்வித்துறை அமைச்ச ரின் பதில் ஏற்புடையதல்ல. கடந்த பத்தாண்டுகளில் பாட நூல் கழகம் விலை வாசி உயர்வை காரணம் காட்டி ரூ.850 வரை பாடநூல்களின் விலையை உயர்த்தியுள்ளது. தனியார் உற்பத்தி செய்யும் பயிற்சிக் கையேடும் கேள்விக் கான வினா புத்தகம் தற்போது வரை அதிக பட்சம் சந்தையில் 320 ரூபாய்க்கு கிடைக்கிறது. தனியார் நிறுவனங்களே குறைந்த விலையில் புத்தகங்களை வழங்கும் போது, ஏன் அரசால், மாண வர்களுக்கு பாடநூல்களை மலிவு விலை யில் வழங்க இயலவில்லை என்ற கேள்வி எழுகிறது. 

இத்தகைய கடுமையான விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. உட னடியாகத் பாடநூல்களை மலிவு விலை யில் அரசு வழங்கிட வேண்டும். அரசின் நிதிச்சுமையை மாணவர்கள் முதுகில் ஏற்றுவது சரியல்ல.

உயர்த்தப்பட்ட பாடநூல்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது,  மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர் தங்களின் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.