திருவள்ளூர், ஜூன் 12- கவரைப்பேட்டையில் பள்ளிக்கு செல்ல தற்காலிக பாதையை அமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் புதனன்று (ஜூன் 12), போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் மந்தமாக நடைபெற்றது வருகிறது.
இந்த நிலையில் ஏற்கெனவே இருந்த பாலம் இடிக்கப்பட்டதால் பஜாரின் அடுத்த பக்கத்திற்கு செல்ல முடியாதபடி வழி அடைப்பட்டது. இதனால் கவரைப் பேட்டை பஜாருக்கு வருப வர்கள் ஒரு பக்கத்திலிருந்து மற்றோரு பக்கத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரை கி.மீ.தூரம் சுற்றி செல்வதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதையொட்டி கவரப் பேட்டையில் மாண வர்கள், சிறுகடை வியா பாரிகள், பொது மக்கள் நெடுஞ்சாலையை கடந்து செல்ல தற்காலிக பாதையை அமைந்திட வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (ஜூன் 12), போராட்டம் நடைபெற்றது.
இதற்கு சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் எம்.ரவிச் சந்திரன் தலைமை தாங்கி னார். இதில் நிர்வாகிகள் ஏ.ஷாஹின்ஷா, கே.மோகன் பாபு, கே.சங்கர், எம்.முனிச் சந்திரன், சண்முகம், பிர சாந்த், சரவணன், கன்னையா, சுகுமாரன், சலூன் மணி, மகேஷ், ஜியா வுதீன் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் தற்காலிக பாதை அமைத்து கொடுக்க காவல்துறை யினர் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப் பட்டது.