ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபணமானால், அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபணமானால், அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பாலியல் புகார் வந்தால், உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும், உடனுக்குடன் தலைமைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.