டாஸ்மாக் ஊழியர்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான கோரிக்கைளை நிறைவேற்றி அறிவிக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஏ.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கர்ணன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் கருணாகரன், பாட்டாளி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணபதி, டாஸ்மாக் ஊழியர் சங்கம்(சிஐடியு) மாவட்ட பொருளாளர் வேல்முருகன், ஏஐசிசிடியு மாநில செயலாளர் ராஜவேலு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அமெரிக்க துணை ஜனாதிபதியே திரும்பிப்போ! கிருஷ்ணகிரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஏப்.21- அமெரிக்காவுடன் இந்திய அரசு இயற்கை வளங்களை தாரை வார்க்க ஒப்பந்தம் செய்வதை கண்டித்து, இந்தியா விற்பனைக்கு அல்ல, அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ்ஸே திரும்பிப்போ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் உத்தனப் பள்ளியில் நடைபெற்றது. சூளகிரி வட்டச் செயலாளர் முரளி தலைமையில், மாவட்டத் தலைவர் முரு கேசன் முன்னிலையில்,மாநில செயலாளர் பி.பெருமாள், மாவட்ட செயலாளர் பிர காஷ் ஆகியோர் விளக்கிப் பேசினர்.மாவட்டப் பொருளாளர் எம். எம்.ராஜு, துணைச் செயலாளர் அனுமப்பா, அஞ்செட்டி வட்டச் செயலாளர் குமார வடிவேல்,ஓசூர் ஆனந்தகுமார், சிபிஎம் அஞ்செட்டி வட்டச் செயலாளர் தேவ ராஜ், சூளகிரி வட்டச் செயலாளர் முருகன், தளி ஒன்றிய செயலாளர் நடராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர்,சி.பி.ஜெயராமன்,மூத்த உறுப்பினர் பி.நாகராஜ் ரெட்டி, டி.எஸ்.பாண்டியன்,எஸ்.ஆர். ஜெய ராமன்,மாவட்ட குழு உறுப்பினர் இருதய ராஜ் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம்
கடலூர் மஞ்சக்குப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது. இந்த முகாமை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் சங்க பயிற்சியாளர் ராகுல் தொடங்கி வைத்தார். இதையடுத்து 14, 16, 19 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக கிரிக்கெட் விளையாட்டுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் மே 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார். கிரிக்கெட் பயிற்சியாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்கேபி பள்ளியில் தடகளப்போட்டி
திருவண்ணாமலை, ஏப். 21- எஸ்.கே.பி கல்விக் குழுமத்தை சேர்ந்த, எஸ்.கே.பி வனிதா பன்னாட்டு பள்ளி மற்றும் எஸ்.கே.பி வனிதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான குடோஸ் கிடோஸ்-2025’ என்கின்ற ஓட்டப்பந்தய போட்டியை நடத்தியது. எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் அரங்கசாமி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆர். சக்தி கிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பள்ளிகளின் முதல்வர்கள் காயத்ரி, பிரியா கருணாநிதி முன்னின்று நிகழ்வை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.இதில் பி.ஆர்.ஓ. சையத் ஜஹிருதீன் கலந்து கொண்டார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் வேலூர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மண்டலத் தலைவர் கே.ரவிச்சந்திரன், டிடிஎஸ்எப் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். டிடிஎஸ்எப் மாநில இணைச் செயலாளர் தண்டபாணி துவக்கி வைத்தும், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் நிறைவு செய்து பேசினர். சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மண்டல பொதுச் செயலாளர் கே.இளங்கோ, துணைத்தலைவர் சி.கேசவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கிளைத் தலைவர் பி.சிலம்பரசன் தலைமையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் ப.செல்வன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எ.லட்சுமணன், மாவட்ட செயலாளர் சிஎம்.பிரகாஷ், விதொச மாவட்ட தலைவர் பி.கணபதி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கோபிநாத், விசிக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் கிளைகள் நிர்வாகி திருப்பதி, சுந்தரசெல்வன் உள்ளிட்டோர்பேசினர்.
தி.மலையில் டாஸ்மாக் ஊழியர்கள்ஆர்ப்பாட்டம்...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், இ.எஸ். ஐ திட்டம், மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் போன்றவற்றை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற கோரி, டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (ஏப்,21) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே. ஆர்.ஏழுமலை தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் பி. செல்வகுமார், மாவட்டத் துணைத் தலைவர் பி.சக்கரவர்த்தி, சிஐடியு நிர்வாகிகள் எம். வீரபத்திரன், எ .சேகர், கே காங்கேயன், ஆர். கமலக்கண்ணன், பி. வெங்கடேசன், கார்த்திகேயன், ஏஐசிசிடியு நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் எஸ். குமரன் நன்றி கூறினார்.