tamilnadu

img

ஜூன் 24-ல் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு அறிவிப்பு

சென்னை, ஜூன் 7- தமிழ்நாடு அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஜூன் 24 அன்று கூட உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம், கடந்த பிப்ரவரி 12 அன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து, 2024-25ஆம்  நிதி யாண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19 அன்றும், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 20  அன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றின் மீது பிப்ரவரி 22 வரை விவாதம் நடைபெற்றது. வழக்கமாக பட்ஜெட் கூட்டம் முடிந்த தும், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடத்தப்படும்.

ஆனால், மக்களவைத் தேர்தல் நெருங்கியதால் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை தேர்தல் முடிந்து, ஜூன்  6ஆம் தேதியுடன், நடத்தை விதிகள்  திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து   அரசின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளது.  அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திற்கு தங்கள் பணிகளை துவக்கினர். இந்த நிலையில், பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 அப்போது, “ஜூன் 24 அன்று காலை 10  மணிக்கு, துறை ரீதியான மானியக் கோரிக் கைகள் மீதான விவாத கூட்டத்தொடர் தொடங்குகிறது” என்றார். இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஜூன் 24-ஆம் தேதிக்கு முன்னதாக அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவையின் முதன் மைச் செயலாளர் கி.சீனிவாசன் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

;