சென்னை,அக்.13- தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம். ‘அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!’ - எனப் பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் பெற 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று! அந்த உத்தம தியாகிக்கு தமிழ்நாடு என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது!” என்று தெரிவித்துள்ளார். கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு