தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சனிக்கிழமையன்று (மார்ச் 14) சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து ஊழியர் கூட்டுறவு சங்க இயக்குநர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கிரேட் மதுஷா, அமுல் ஆகியோருக்கு தலைவர்கள் சால்வை அணி வித்து பாராட்டு தெரிவித்தனர். எம்டிசி கிளை செயலாளர் கே.வீரராகவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் கே.கர்சன், எம்டிசி கிளை பொருளாளர் ஏ.முத்துக்குமார், பிஎஸ்என்எல் ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநிலச் செயலாளர் புனிதா உள்ளிட்டோர் பேசினர்.