tamilnadu

img

டிரில்லியண்ட் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தம்

சென்னை, செப்.5- அமெரிக்காவில் டிரில்லியண்ட் நிறு வனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,“சிகாகோவில் அற்புத மான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தி டப்பட்டுள்ளது.

நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தி யை விரிவுபடுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளேன். சென்னையில் உற்பத்தி ஆலை விரிவாக்கம் குறித்து நைக்  நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.

திருச்சி, மதுரையில் ஆப்டம் நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆப்டம் நிறு வனம் ஏற்கனவே சென்னையில் மருத்துவ துறையில் முதலீடு செய்து செயல்பட்டு வரு கிறது. இதில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அமெரிக்கா சென்றிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.