tamilnadu

மாணவர் சங்கத் தலைவர்களை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுத்திடுக! அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,செப்.27- ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களின் இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர் சங்கத் தலைவர்களை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி பொறுப்பு முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது தமிழக அரசு கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின்  மாநிலத் தலைவர் தெள. சம்சீர் அகமது, மாநிலச் செய லாளர்  கோ. அரவிந்த சாமி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அடிப்படை  வசதிகளை மேம்படுத்த வலி யுறுத்தியும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங் களை பல மாணவர்கள் ஒருங்கிணைத்த நிலையில், குறிப்பிட்ட மாணவர்களை மட்டுமே கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. 

பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் அடாவடி

இரண்டு வெவ்வேறு போராட்டங்களி லும் பங்கேற்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லி இருந்தது, குறிப்பாக கூலித் தொழிலாளியான மாணவர் சாமுவேலின் பெற்றோரை வரவழைத்தனர். ஆனால் பொறுப்பு முதல்வர் மாணவரின் பெற்றோ ரை சந்திக்க தயாராக இல்லை. அறக்கட்ட ளையின் செயலாளர் அலுவலகத்திற்கும் கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கும் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இறுதி யாக இரண்டு மாணவர்களும் அக்டோபர் மாதம் முதல் தேதி வரை கல்லூரிக்குவரக் கூடாது என வாய் வழியாக உத்தரவிட்டனர்.

செப்டம்பர் 26 அன்று அது குறித்து விசாரிக்கச் சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அருண்குமாரை கல்லூரி முதல்வர் வழியிலேயே பார்த்துவிட்டு, உள்ளே உங்க ளை அனுமதிக்க முடியாது என வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். முதல்வரை தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களும் அவர்களை சூழ்ந்துகொண்டு சண்டை யிட்டுள்ளனர்.

அதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்டச் செயலாளர்  மிருதுளாவை யும்  கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரி யர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் சூழ்ந்து கொண்டு மிகவும் கடும் மோசமான  வார்த்தைகளால் வசைபாடியதோடு மட்டுமல்லாமல் கல்லூரி வளாகத்திலேயே அவர்களை தாக்கவும் முயன்றுள்ளனர்.  

எஸ்எப்ஐ பெண் நிர்வாகி மீது தாக்குதல்

 அருண்குமாரின் சட்டையைப் பிடித்து ஒரு பேராசிரியர் அடிக்க வந்திருக்கிறார். பெண் என்றும் பாராமல் மிருதுளாவின் கைகளை முறுக்கி அவருடைய செல்போனை பறித்திருக்கிறார் கௌரவ விரிவுரையாளர் ஜவகர்.

உரிமைக்காக போராடிய மாண வர்களை கல்லூரி ஆசிரியர்கள் கிரிமினல் குற்றவாளிகளை போல் நடத்தியது மட்டுமல்லாமல், அதனை விசாரிக்கச் சென்ற  மாணவர் சங்க தலைவர்களை ஒருமையில் பேசி தாக்குதலில் ஈடுபட்டதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மாவட்டச் செயலாளர் மிருதுளா தாக்கப்படும்பொழுது அத்தனை பெண் பேராசிரியர்களும் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். காவல்துறை கூறியும் கேட்காமல் மாணவர் சங்கத் தலை வர்களை கல்லூரி நிர்வாகத்தினர் சூழ்ந்து கொண்டு தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் மீதான நடவடிக்கைகளை  கைவிடுக

மாணவர்களுக்கு அறத்தின் வழியில் நடந்து கொள்வதற்கு சொல்லித்தர வேண்டிய பேராசிரியர்களே, அடியாட்கள் போல நடந்து கொண்டதை இந்திய மாண வர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, ஆசிரியர்களின் இத்தகைய செயலை மிகவும் கவலையோடு பார்க்கிறது. பச்சைப்பன் கல்லூரி பேராசிரியர்கள்  கண்ணியத்தோடு எப்படி நடந்துகொள்வது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். 

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களின் மீதான அனைத்து நடவடிக்கை களையும் கைவிட வேண்டும் .கல்லூரி வளா கத்திற்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கல்லூரியில் அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும்.  கல்லூரியில் மாணவர் சங்க தலைவர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட கல்லூரி பொறுப்பு முதல் வர், கௌரவ விரிவுரையாளர் ஜவகர், சிவா  உள்ளிட்ட அனைவர் மீதும் உரிய நட வடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.