புதுச்சேரி, ஜூன் 30- புதுச்சேரி காவல்துறை யில் ஊர்க்காவல் படையில் ஆண்கள் 420, பெண்கள் 80 என மொத்தம் 500 பணி யிடங்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்.30 முதல் நவ.29 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப் பட்டது. ஆண்கள் 15,697, பெண்கள் 4,492 என மொத்தம் 20,189 பேர் விண்ணப்பித்தனர்.
இப்பணிக்கான உடற்தகுதி தேர்வு கோரி மேட்டில் உள்ள ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் கடந்த பிப்.1 முதல் 23 வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் 3,034 பேர், பெண்கள் 1,195 பேர் என மொத்தம் 4,229 பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்கு 12 மையங்க ளில் தேர்வு இத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை ஜூன் 30 அன்று நடைபெற்றது. ஆண்கள் 2,908 பேர், பெண்கள் 1,111 என மொத்தம் 4,019 (95.03 விழுக்காடு) பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதி னர். 210 (4.97 விழுக் காடு) பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இத்தேர்வுக்கு காலை 8 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வருகை தந்த தேர்வு எழுதுப வர்களை பல கட்ட சோதனைக்கு பிறகு அனு மதிக்கப்பட்டனர். அனைத்து தேர்வு மையங்க ளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்ட அனைத்து தேர்வு அறைகளில் சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
தலைமை செயலகம் முற்றுகை
ஊர்க்காவல் படை வீரர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு காலை 9.30 மணிக்குள் தேர்வர்கள் வந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு நிமிடம் காலதாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெற்றோருடன் புதுச்சேரி கடற்கரை சாலை யில் உள்ள தலைமை செயல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து எழுத்து பூர்வமாக உரிய விளக்கம் தெரி விக்குமாறு கேட்டுக் கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. கால தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்காத தால் உப்பளம் தேர்வு மையத்தில் எதிரில் உள்ள அம்பேத்கர் சாலையில் தேர்வர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.