tamilnadu

img

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சென்னை நிறுவனத்தின் ராக்கெட்

சென்னை, மே 30- சென்னை ஐ.ஐ.டியுடன் இணைந்து ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தரமணியில் இயங்கி வருகிறது. ராக்கெட் வடி வமைப்பை அடிப்படையாக கொண்ட  இந்த நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)  உதவியுடன் ஆந்திர மாநிலம்  நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மை யத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத் துள்ளது. தனியார் பயன்பாட்டுக்கு சிறிய ரக ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்கான இந்த ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுதளத்தில் இருந்து முதல் முறையாக சென்னையை சேர்ந்த தனி யார் நிறுவனம் வடிவமைத்த ‘அக்னி பான் சார்டெட்’ எனும் சிறிய ராக்கெட்டை ஏவத் திட்டமிடப்பட்டது. இந்த ராக்கெட் சுமார் 300 கிலோ எடை  கொண்ட விண்கலத்தை சுமந்து கொண்டு, பூமியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் திறன்  கொண்டது. 2 நிலைகள் கொண்ட அக்னிபான் ராக்கெட் பகுதி கிரயோ ஜெனிக் இயந்திரம் மூலம் இயங்கக் கூடியது.

இந்த ராக்கெட்டை கடந்த மார்ச் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்ட மிடப்பட்டது. இறுதிக் கட்ட சோதனை யின்போது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் ராக்கெட் ஏவுதல் 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், செமி கிரையோ ஜெனிக் மூலம் இந்த ராக்கெட் வியாழனன்று (மே 30) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் ஏவும் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;