புறநகர் ரயில்கள் ரத்து:
இன்று கூடுதலாக
150 பேருந்துகள்
சென்னை, பிப். 24- சென்னையில் ஞாயிறன்று (பிப்.25) புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப் படவுள்ளன. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் சேவை ஞாயிறன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப் படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இதனால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துய கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று மாரத்தான் ஓட்டம்
சென்னை,பிப்.24 தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வுக் கான மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த ஒட்டம் சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவன் அருகே ஞாயிறன்று (பிப்.25) காலை 5.45 மணிக்கு தொடங்குகிறது.
இந்த மாரத்தான் 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என 3 பிரிவு களில் நடக்கிறது. இதில் 2,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்