சென்னை, ஜூன் 23- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு அமைச்சர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே. பன் னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட னர். அதன் விவரம் வருமாறு:
பெண்களுக்கு தலா 40 கோழிக் குஞ்சுகள்
ஏழ்மை நிலையில் உள்ள கண வனை இழந்த பெண்கள் மற்றும் கண வனால் கைவிடப்பட்ட மற்றும் ஆத ரவற்ற பெண்கள் என, 38 ஆயிரத்து 700 பெண் பயனாளிகளுக்கு 50 சத வீதம் மானியத்தில் தலா 40 நாட்டு ரக கோழிக் குஞ்சுகள், 6 கோடியே 45 லட் சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
செட்டிநாடு மாவட்ட கால்நடை பண்ணையில் பசுந்தீவன உற்பத்தி யை மேலும் அதிகரிக்க பயிரிடப் படாத 100 ஏக்கர் நிலப்பரப்பில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனப் பயிர்கள் ரூ. 5 கோடி செலவில் பயிரிடப்பட்டு தீவன உற்பத்தி பெருக்கப்படும்.
ஊட்டச்சத்து டானிக்
கறவை மாடுகளுக்கு வழங்கப் படும் பல்வேறு மருந்துகளின் பயன் பாட்டை குறைக்கும் வகையில் பால் கூட்டுறவு சங்கம் மூலம் நியாயமான விலையில் ஊட்டச்சத்து டானிக் விற் பனை செய்யப்படும்.
கோவையில் தமிழ்நாடு வேளா ண்மை பல்கலைக்கழகத்தில் தீவன உற்பத்திக்கு மேம்படுத்தப்பட்ட உத்தி கள் குறித்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஆகியோருக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த சுகாதாரத்தின் கீழ் 5 லட்சம் செல்லப் பிராணிகளுக்கு ஒரு கோடி செலவில் 50 விழுக்காடு மானியத்தில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படும். கால்நடை நிறு வனங்களில் நவீன நோய் அறியும் கரு விகளை கையாளுவதற்கு என நான் கில் ஒரு கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஒரு கோடி ரூபாய் செலவில் அளிக்கப்படும்.
மீனவர் நலன்...
ஆழ்கடல் மீன்பிடிப் படகு களுக்கு 200 செயற்கைகோள் தொலைபேசிகள் வாங்க 40 விழுக்காடு மானியம் வழங்கப்படும். நாகை மாவட்டம், செருதலைக்காடு மீனவ கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் 5 கோடியில் மேம்படுத்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம், கானத் தூர் ரெட்டி குப்பத்தில் ரூ. 19 கோடி யில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கப்படும். ரூ.32 கோடியில் மயிலாடுதுறை மாவட் டம், சந்திரபாடி மீன் இறங்குதளத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்து வதற்கு நண்டலாறு ஆற்றின் முகத் துவாரத்தை தூர்வாரி தடுப்புச் சுவர் அமைத்தல் ரூ. 52 கோடியில் கன்னி யாகுமரி மாவட்டம், பெரியநாயகி தெரு, பள்ளம் துறை மீன் இறங்கு தளங்களில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ. 37 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் மீனவ கிராமத்தில் படகு அணையும் தளம் அமைக்கப்படும். ரூ.15 கோடியில் மயி லாடுதுறை மாவட்டம், கீழ மூவர் கரை மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் கரையோர உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் படும்.
தஞ்சாவூர் மாவட்டம், ஏரிப்புறக் கரை கிராமத்தில் மீன் இறங்கு தளம் கீழத் தோட்டம் மீனவ கிராமத்தில் தடுப்பு சுவர் அமைத்து மீன் இறங்கு தளத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத் தப்படும். ரூ. 38 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் விவேகானந்தர் நகரில் மீன் இறங்கு தளம் அமைத்தல் & பெரிய தாழை மீன் இறங்குதளத்தில் தூண்டில் வளைவு நீட்டிக்கும் பணி கள் மேற்கொள்ளப்படும்.
ரூ.20 லட்சத்தில் பசுமை குடில்!
மக்காச்சோள சாகுபடியை ஊக்கு விப்பதற்காக சிறப்புத் திட்டம் 18 மாவட்டங்களில் ரூ. 30 கோடியில் செயல்படுத்தப்படும். ரூ. 10 கோடியே 19 லட்சம் மானியத்தில் பசுமைக் குடில், நிழல் வலைக் குடில்கள் அமைக்கப்படும்.
5 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங் களில் ரூ. 10 கோடி செலவில் பாது காப்புக் கூடங்கள் அமைக்கப்படும். துவரை உள்ளிட்ட பிற பயறு வகை களின் பரப்பு விரிவாக்கத்திற்கு அவை களின் உற்பத்தித் திறனை அதிக ரிக்கும் பொருட்டு ரூ.10 கோடி ஒதுக் கீடு செய்யப்படும்.
காய்கறி விலையை கட்டுப்படுத்த புதிய திட்டம்
கோடைக் காலத்தில் காய்கறிகள் விலையை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகருக்கு காய்கறி அளிக்கக்கூடிய மாவட்டங்களில் நிழல் வலைக் குடில் அமைத்து காய் கறிகள் சாகுபடியை ஊக்குவித்து காய்கறிகளின் வரத்து அதிகரிக்கும் வகையில் ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
டெல்டா மாவட்டங்களில் வறட்சி யான காலங்களில் பாசன நீர் தேவை யை பூர்த்தி செய்திடும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களை தூர்வாரி மேம்படுத்தப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் கலைஞர் நூற்றாண்டு
பூங்கா, சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலை மரபணு பூங்கா ஆகியவற்றில் அடிப்படை வசதிகள் ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
ஏற்றுமதி ஆலோசனைகள்!
பேரிடர் காலங்களில் வெள்ள நிவா ரணப் பணிகளை மேற்கொள்ள ஏது வாக சர்க்கரை வகை நெல் அறுவடை இயந்திரங்கள் மாற்றி வடிவமைத்த ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும். தொழில் துவங்க ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு இல வசமாகத் திட்ட அறிக்கை தயாரித்து வங்கிக் கடன் பெற வழிவகை செய் யப்படும்.