tamilnadu

img

இலங்கை கடற்படை அத்துமீறல்: மீனவர்கள் பலத்த காயம்

சென்னை:
இலங்கை கடற்படையினர் அத்துமீறி கல்வீசி தாக்கியதில்  ராமேஸ்வரம் மீனவர்கள் தலையில் பலத்த காயம் அடைந்தனர். ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 560 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சுமார் ஒன்பது கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்து கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 
இதில் படகில் இருந்த மீனவர்கள் இயேசு ராஜா, தேவா ஆகியோரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடி வலைகளை கடலிலேயே விட்டு விட்டு கரை திரும்பியுள்ளனர். மேலும் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் படகில் இருந்த கண்ணாடிகள் மற்றும் வலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

;