tamilnadu

img

திருநெல்வேலி, நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு

சென்னை, ஜூன் 2-  சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவி லுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஜூன் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் தோறும் இயக்  கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்  யப்படுகிறது.

இது குறித்து  தெற்கு ரயில்வே சார்பில் வெளி யிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூ ருக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06070) மறுமார்க்கத்தில் எழும்பூரிலிருந்து வாரந் தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல் வேலிக்கு புறப்படும் ரயில் (எண்: 06069) ஜூன் 6 முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாகர் கோவில்- சென்னை எழும்பூர் இடையே இயங்கும் வாராந்  திர சிறப்பு ரயில் (எண்: 06019 /06020) கேரள மார்க்கமாக இயக்கப்பட்டு வரும் நிலையில்  தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து ஜூன் 9, 23 ஆகிய  தேதிகளில் இரவு 11.15 மணிக்கு  புறப்பட்டு வள்ளியூர், திரு நெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக் கல், திருச்சி வழியாக இந்த ரயில் எழும்பூருக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு வந்தடை யும். மறுமார்க்கமாக ஜூன் 10, 24 ஆகிய தேதிகளில் எழும்பூ ரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதே வழியாக மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

;