“நாற்பதும் நமதே!
நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திட களப்பணி ஆற்றுவோம் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச் 19 - “2024 மக்களவைத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டவும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்று காட்டியே தீரு வோம்!” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள் ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலக்கும் - களமும்...
இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மையைக் காக்கவும், மத வெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லி ணக்கம் தழைக்கவும், அரசிய லமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜன நாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 மக்களவைத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திமுகவுடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்ட, 2024 மக்களவைத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என் கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணிக்கு தோள் கொடுக்க தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.
பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் இந்தப் பயணத்தில், ஒரு சில ஜன நாயக இயக்கங்களுக்கு தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டி ருக்கிறது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது. தொகுதி களின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங் கள் இடமும் என் சார்பிலும் கழ கத்தின் சார்பில் விளக்கப்பட்டுள்ளது.
கொள்கை உறவு...
2019 மக்களவைத் தேர்த லுக்கு முன்பே தோழமைக் கட்சியின ருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019 மக்களவைத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம்.
வெற்றிக் கூட்டணி
ஐந்தாவது முறையாகத் தொட ரும் இந்த கொள்கை அடிப்படை யிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சி யினருக்கு உரிய வகையில் இடங் களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகள் செய்யும் ஜனநாயகபூர்வமான நடைமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
ஜனநாயகப் பண்புகள்
நடைபெறவிருக்கும் மக்கள வைத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆத ரவு நல்கி, தேர்தல் பணியாற்ற முடி வெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
பக்கபலமாக இருக்கும் கட்சிகள்
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் மக்களவைத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையில், மதவெறி பாசிசத்தை வீழ்த்திட திமுக தலைமையிலான கூட்டணிக்கு பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர் வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற் கிறேன். மனதார நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்.
“நாற்பதும் நமதே நாடும் நமதே”
அதுபோல, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன் வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 மக்கள வைத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்ற த்தை நிகழ்த்திக் காட்டவும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற் போம்! வென்று காட்டியே தீரு வோம்!”
இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.