சென்னை, மே 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஏ.ஆதிகேசவலு (90) வெள்ளிக்கிழமை (மே 17) காலமானார். இவர் கிண்டி கிளாஸ்கோ நிறுவனத்தில் பணி யாற்றும் தன்னை சிஐடியு வில் இணைத்துக் கொண்டார்.
பின்னர் கம்யூ னிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நிறுவனத்தில் தொழி லாளர்களின் கோரிக்கைக ளுக்காக போராடி வெற்றி கண்டவர். வியாசர்பாடி பள்ளத்தெரு கட்சிக் கிளை யின் கிளைச் செயலாள ராக நீண்ட காலம் பணி யாற்றினார். தோழர் வி.பி.சிந்தனை வைத்து பொதுக்கூட்டம் நடத்திய வர். ஒன்றுபட்ட கம்யூ னிஸ்ட் கட்சியாக இருந்த காலத்தில் பாவலர் வரத ராஜனை வைத்து அந்த பகுதியில் கருத்து பிரச்சாரத்தை நடத்தியவர்.
இளைஞர்களை, மாண வர்களை, அமைப்புசாரா தொழிலாளர்களை திரட்டு வதில் முக்கிய பங்கு வகித்தவர். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சிபிஎம் மாநில மாநாட்டில் தோழர் சங்கரய்யா, தோழர் ஆதி கேசவலுக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார். தனது இறுதி மூச்சு வரை கட்சியின் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் நலன்க ளுக்காகவும் பாடுபட்டார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், பகுதிச் செயலாளர் அ.விஜய குமார், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டப் பொருளாளர் எஸ்.ஏ.வெற்றிராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சனிக்கிழமை (மே 18) மாலை 3 மணியளவில் முல்லை நகரில் உள்ள இடு காட்டில் தகனம் செய்யப் பட்டது.