பால் புதுமையினர் குறித்த புரிதல் கருத்தரங்கு
வானவில் சுயமரியாதை பேரணியையொட்டி பால் புதுமையினர் குறித்த புரிதலரங்கு ஞாயிறன்று (ஜூன் 16) தரமணியில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடகவியலாளர் ஸ்ரீஜித் சுந்தரம், எழுத்தாளர் அக்னி பிரதீப், நீலம் அறக்கட்டளை நிறுவனர் முத்தமிழ், மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அமர், செயலாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர்.