tamilnadu

img

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 10 பேர் கைது

சென்னை, மே 13- சென்னை சேப்பாக்கத்தில் கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 10 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது  செய்தனர்.

சென்னையில் சிஎஸ்கே பங்கேற்கும் போட்டி என்றால், ரசிகர்கள் பலரும் முண்டி யடித்து டிக்கெட்டுகளை வாங்க குவிந்து  வருகின்றனர். அப்படி டிக்கெட் கிடைக்காத சமயத்தில், அதிக விலைக்கு கள்ளச்சந்தை யில் டிக்கெட் கிடைத்தாலும் ரசிகர்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து, போலீசார் அவ்வப் போது கைது செய்து நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். அந்த வகையில் ஞாயிறன்று சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தை யில் விற்றதாக புகார் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 10 பேரிடம் இருந்து 27 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து போலீ சார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

;