சென்னை,ஜன.31- தமிழ்நாட்டில் தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்காக, அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அங்குள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜன. 29 அன்று நடைபெற்ற தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடி னார். இதன் தொடர்ச்சியாக ஜன.30 அன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார் கள். அப்போது தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்.
முதலீடு செய்ய ஆர்வம்
இந்த சந்திப்பின்போது ஆக்சி யானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு முதல மைச்சருடன் பேசினார். அப்போது, காற்றாலை மின் உற்பத்தியில், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியில் இந்தியா வின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறை யில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக் கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியானா நிறுவனத்தின் முதலீட்டுக்கு உகந்த இடமாக தமிழ் நாடு இருக்கும் என்று முதலமைச்சர் எடுத்துரைத்தார். இந்த கலந்தாலோ சனையின் முடிவில் தமிழ்நாட்டில் இத்துறைகளில் முதலீடுகள் செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
முதலீடு செய்ய வாருங்கள்!
அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட் களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர், இந்திய இயக்குநர் நிர்மல் குமார், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது, ரோக்கா நிறு வனம், தற்போது தமிழ்நாட்டில் பெருந் துறை, ராணிப்பேட்டையில் செயல் பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனை மேலும் உயர்த்திடவும், சர்வதேச ஏற்றுமதிக் காகவும், அதன் விரிவாக்கத்தையும் புதிய தொழில் பிரிவுகள் தமிழ்நாட்டில் துவக்க வேண்டும் என்றும் முதல மைச்சர் கேட்டுக்கொண்டார்.
பெருந்துறையில் புதிய தொழிற்சாலை
இந்த கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் ரூ. 400 கோடி முதலீடு செய்வ தற்கு உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந் துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலை நிறுவிடவும். ராணிப்பேட்டையிலும் பெருந்துறை யிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன்வந் துள்ளது. இதனால் 200 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவா கும்.
இதனையடுத்து, வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களு டன் தமிழ்நாடு முதலமைச்சர் முத லீட்டு ஆலோசனைகள் மேற்கொள் வார்.
இந்த தகவல் தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.