சென்னை, ஜுன் 26- அப்போலோ புற்று நோய் மையத்தில் ACC), கதிரியக்க சிகிச்சை சாத னங்களை வழங்கும் சர்வ தேச புகழ்பெற்ற நிறுவன மான அக்யூரே – ன் ஒத்து ழைப்போடு, ரோபோட்டிக்& சீரியோடாட்டிக் அறுவை சிகிச்சை செயல் திட்டம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது.
சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அப்பல்லோ புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை துறை யின் முதுநிலை மருத்துவர் சங்கர் வங்கிபுரம் மருத்துவ மனையின் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்க ளில் இயங்கி வரும் அப்போலோ புற்றுநோய் மையங்களின் வளாகங்க ளில் இத்தகைய சிகிச்சைக் கான கல்வி மையங்கள் நிறுவப்படும் என்றார். மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் பிறகல்வி நிறுவனங்களைச் சேர்ந்த புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை மருத்து வர்கள், இயற்பியலாளர் கள், கதிர்வீச்சு சிகிச்சை நிபு ணர்கள் மற்றும் தொழில் நுட்பபணியாளர்களுக்கு மேம்பட்ட கதிரியக்க அறுவை சிகிச்சை கல்வி சார்ந்த பயிற்சியினை இம்மையங்கள் வழங்கும் என்றும் அவர் கூறினார். இக் கல்வித் திட்டத்தில் விரிவான விவாதங்கள், கலந்துரையாடல்கள், செய்முறை விளக்கங்கள் மற்றும் நேரடி பயிற்சி ஆகியவை உள்ளடங்கும் என்று கதிரியக்க சிகிச்சை முதுநிலை நிபுணரான மகாதேவ் பொத்துராஜ் கூறினார்.