அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கை கேட்டு
சென்னை எழும்பூர் பென்டிங்க் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளி என இப்பள்ளிகள் செயல்படுகின்றன. சுயநிதிப் பள்ளியில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அரசு உதவிப்பெறும் பள்ளியிலும் மாணவர் சேர்க்கையை நடத்த வலியுறுத்தி திங்களன்று (மே 19) பள்ளி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.மூர்த்தி, நாகராணி, வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஜெ.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.