கடை முன்பு தடைகள் அகற்றம்
சிபிஎம் போராட்டம் எதிரொலி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மங்கலம் மாமண்டூர் கூட்டு சாலையில், சிபிஎம் மூத்த நிர்வாகி அரிதாசு கடை அமைந்துள்ளது. அப்பகுதி யில் உள்ள சிலரின் தூண்டுதல் பெயரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அந்த கடையை திறக்க முடியாமல் முடக்கி வைத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் கடை திறக்கக் கூடாது என விளம்பர பலகை வைக்கப்பட்டது. அதை கண்டித்து சிபிஎம் சார்பில் வெள்ளியன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல் துறை யினர் அரிதாசின் கடையின் முன்பு தடை யாக வைத்திருந்த விளம்பரப் பலகை களை அகற்றினர். இதனால் காத்திருக்கும் போராட்டம் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது. இந்த காத்திருக்கும் போராட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினர் சேட்டு தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் ப. செல்வன், வட்டார செயலாளர் அப்துல் காதர், மாவட்ட குழு உறுப்பினர்கள் யாசர் அராபத், சுகுணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.