tamilnadu

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துக! 10 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் அக்.23 சென்னையில் பெருந்திரள் தர்ணா

சென்னை,செப்.25-  ஆந்திராவைப் போல்  தமிழ்நாட்டிலும் மாற்றுத்திற னாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அக்டோபர் 23  அன்று சென்னையில் பத்தா யிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் பங்கேற்கும் ‘பெருந்திரள் தர்ணா’ போராட்டம் நடத்தப்படு கிறது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC)   மாநிலக்குழு கூட்டம் செப்டம்பர் 21 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் மாநில தலை வர் தோ.வில்சன் தலைமையில் நடைபெற்றது. ஊனமுற்றோர் உரி மைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், சங்க மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி, பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, செயலாளர் பி.ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

தமிழக அரசு சமீபத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ,  மாணவியருக்கான கல்வி உத வித்தொகையை இரட்டிப்பாக்கி உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளி யிட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேவேளையில், மாதாந்திர உதவித்தொகை பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுள் சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.1500-ம், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.2000-மும் மாத உதவித் தொகையாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இது, இன்றைய வாழ்வாதாரச் சூழ லில் மிகக் குறைந்த உதவித் தொகையாகவே உள்ளது. அதேவேளையில், ஆந்திர அரசு சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.6000மும், கடும் ஊனமுற் றோருக்கு ரூ.10,000மும், வெளியே  நடமாட இயலாமல் வீட்டிலேயே முடங்கி உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.15000மும் வழங்கி வருகிறது.

எனவே, தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு ஆந்திர மாநில அரசு  வழங்குவதைப் போன்று  மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். உதவித் தொகை அனைத்தையும் மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் மட்டுமே வழங்கிட வேண்டும். உதவித் தொகை கேட்டு புதி தாக விண்ணப்பித்து இதுவரை  உதவித்தொகை கிடைக்கா மல் காத்திருக்கும் மாற்றுத்திற னாளிகள் அனைவருக்கும் உடனே உதவித் தொகை வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளுள் பல ருக்கு இந்த நிதி ஆண்டில் வேலை  வழங்கப்படாததை கண்டிப்ப தோடு, வேலை கேட்டு   விண்ணப்பித்த மாற்றுத்திற னாளிகள் அனைவருக்கும் உடனே வேலை வழங்க வேண்டும்.  8 மணி நேர வேலைக்குப் பதிலாக ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி 4 மணி நேர வேலை, இலகுவான வேலை, முழு ஊதியம் உறுதிப்படுத்திட வேண்டும். மேலும், 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்துவிட்டு வயது வரம்பு பாராமல் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே நிறை வேற்றிட வலியுறுத்தி அக்டோபர் 23 அன்று சங்கம் சார்பில் சென்னையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ‘பெருந்திரள் தர்ணா’ நடத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.