உதவி ஆய்வாளர் தற்கொலையில் மர்மம்: உறவினர்கள் மறியல்
புதுச்சேரி, நவ. 22- உயர் அதிகாரிகளின் மன உளச்சலால் தற்கொலை செய்துகொண்ட உதவி ஆய்வா ளர் விபல்குமார் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விபல்குமார்(38) புதனன்று பணியின் போது காவல்நிலைய ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை பாலு காவல்துறை யிடம் புகார் அளித்துள்ளார். விபல்குமார் மன உளைச்சலுக்கு காரண மான காவல்துறை ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், மரணமடைந்த உதவி ஆய்வாளர் எழுதிய 3 பக்க கடிதத்தை பொது மக்கள் மத்தியில் வெளியிட வேண்டும், அவரின் செல்போன் எண்ணை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், இந்த மரணத்திற்கு நேர்மையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விபல்குமாரின் உறவினர்கள், மற்றும் நெட்டப்பாக்கம் பகுதி மக்கள், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை உயர் அதிகாரி ராகுல் அலுவால், எஸ்.பி.க்கள் ரங்கநாதன், ஜிந்தா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, மேட்டுப் பாளையம் எஸ்.பி.அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவரது தந்தையிடம் புகார் மனுவை பெற்றுக் கொண்டு உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். நெட்டப்பாக்கத்தில் பெண் ஒருவர் வல்லு றவுக்கு ஆளானதால் குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்துள் ளார். அப்புகார் மீது உதவி ஆய்வாளர் விபல்குமார் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று, காவல்நிலைய உயர் அதிகாரி கொடுத்த மன உளச்சலால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.
பச்சிளம் பெண் குழந்தையை விற்ற தந்தை கைது
திருநெல்வேலி, நவ.22- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேசு இருதயராஜ் (வயது 43). இவருடைய மனைவி புஷ்பலதா (35). இவர்களுக்கு ஏற்கனவே 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் புஷ்பலதா மீண்டும் கர்ப்பம் ஆனார். அவர் பிரசவத்துக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 3 ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தன. பின்னர் சிகிச்சை முடிந்து புஷ்பலதா வீட்டுக்கு வந்தார். ஜேசு இருதயராஜ் தனது மனைவியிடம் தற்போது பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்யப் போவதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது புஷ்பலதாவிடம் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை பறித்த ஜேசு இருதயராஜ், அந்த குழந்தை யுடன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். பின்னர் அவர் குழந்தை இல்லாமல் வீட்டுக்கு வந்தார். இதனால் அவரை உறவினர்கள் கண்டித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிவந்திபுரம் கிராம நிர்வாக அதிகாரி குரு, விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேசுஇருதயராஜை பிடித்து விசாரணை நடத்தினர். விசார ணையில், அவர் தனது பெண் குழந்தையை ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் குழந்தையை விற்பனை செய்வதற்கு ஆலங்குளத்தை சேர்ந்த தங்க ராஜ், செல்வம், கண்ணன், சிவந்திபுரத்தை சேர்ந்த நெல்லையப்பன் ஆகிய 4 பேர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜேசு இருதயராஜை கைது செய்தனர்.மேலும் தங்கராஜ் உள்பட 4 பேரையும் பிடித்து, அவர்கள் இது போல் வேறு ஏதேனும் குழந்தைகளை விற்பனை செய்வ தற்கு உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆலங்குளம் தம்பதியிடம் இருந்து குழந்தையை போலீ சார் மீட்டு நெல்லையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்த னர்.
வன கல்யாண சீத்தாபழம் அமோக விளைச்சல்
திருவில்லிபுத்தூர், நவ.22- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (50). இவர் செண்பகத் தோப்புப் பகுதியில் தோப்பு வைத்துள்ளார். இதில் 50 வன கல்யாண சீத்தாப்பழ மரங்களை வரை வளர்த்து வரு கிறார். ஆண்டுதோறும் வன கல்யாண சீத்தாப்பழம் புரட்டாசி மாதத்தில் இருந்து தை மாதம் வரை விளையும், சாதா ரண சீத்தாப்பழம் பெரிய அளவில் சுமார் 400 கிராம் எடை யிருக்கும், ஆனால், வன கல்யாண சீதா பழம் ஒன்று ஒருகிலோ எடை வரை செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதுசாதாரண சீத்தாப் பழம் போல் பெருமளவில் சந்தைக்கு வரவில்லை. ஆனால் இதன் மருத்துவகுணம் மகத்தானது. இதயத்தை வலு வாக்கி, ரத்தத்தை சுத்தப்படுத்தும். ஆரம்பகட்ட புற்றுநோயை குணமாக்கும் வல்லமையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.