காஞ்சிபுரத்தில் மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம், ஆக.25- காஞ்சிபுரம் தாமரைப் பள்ளம் தெருவில், சேத மடைந்த மழைநீர் வடி கால்வாய் தளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநக ராட்சிக்குட்பட்ட 2வது வார்டு , தாமரைப்பள்ளம் தெருவில் உள்ள அமைக்கப் பட்டுள்ள கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் தளம் மூன்று இடங்களில் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், இச்சாலை யில் இருசக்கர வாகன ஓட்டி கள் மட்டுமின்றி, கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் பள்ளி மாணவர்கள், பாத சாரிகள் சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயநிலையில் உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், தாமரை பள்ளம் தெருவில், சேதமடைந்த கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீர மைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.