பணிகொடை வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் முற்றுகை போராட்டம்
ஓய்வூதியம் பெற்ற அங்கன்வாடி ஊழி யர்களுக்கு பணிகொடை வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி ஓய்வூதியம்பெற்றுள்ள 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிகொடை மற்றும் 50விழுக்காடு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை பின்புறம் நடைபெற்ற முற்றுகையில் புதுச்சேரி மாநில அங்கன்வாடி பணி யாளர்கள் நல சங்கத்தின் தலைவர் மண்ணாங்கட்டி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முன்னதாக மாதா கோவில் அருகில் இருந்து வந்தவர்கள் காவல்துறையினர் தடுப்பு வேலி களை அமைத்து தடுத்தனர்.சிறிது நேரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியம் பெற்ற அங்கன்வாடி பெண் ஊழியர்களை காவல்துறையினர் கைது