கல்வராயன் மலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள தொரடிப்பட்டு கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையின் திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொரடிப்பட்டு, கொட்டப்புத்தூர், மேல்பாச்சேரி, சின்னதிருப்பதி, கொடமாத்தி உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டப்புத்தூர் வெள்ளிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.