சென்னை:
நிவர் புயலில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழக அரசு கடந்த கால அனுபவங் களில் இருந்து மக்களை பாதுகாத்திட உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியில் செல்வதை தவிர்த்து தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்சார்பாக பொது மக்களுக்கு உதவுவதற்காக, உதவி மையங்கள் உருவாக்கப்பட்டு, தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள் ளன. அனைத்து மாவட்டக்குழுக்களும் உணவு, தண்ணீர், மருத்துவம் மற்றும் நிவாரணம் ஆகிய பணிகளைச் செய்து மக்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் தயார் நிலையில் இருந்து உதவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.