சென்னை, மே 12- ஒரு சொத்தின் அடையாளமாக நாம் தெருவையும், அதில் உள்ள நம்பரையும் கூறுவோம். ஆனால் அரசின் வருவாய் பதிவேட்டில் ஒவ் வொரு இடத்திற்கும் ஒரு சர்வே எண்ணும், அதன் உட்பிரிவு எண் ணும் இருக்கும். அது தான் அந்த நிலம் மற்றும் வீட்டின் உண்மை யான அடையாளம். அதன் அடிப்ப டையில் தான் பத்திரப்பதிவுகள் எல்லாம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சர்வே எண்ணை நாம் நமது பதிவு பத்திரங்கள் அல்லது பட்டா ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த சர்வே எண் இல்லாவிட் டால், நில விவரங்களை நம்மால் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. இந்த சர்வே எண்கள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் தான் பல்வேறு நில மோசடிகள் அரங்கேறி வருகிறது. அரசும், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் நில மோசடிகள் குறையவில்லை.
உதாரணமாக, ஒரு நிலத்தை விற்பனைக்கு காண்பித்து விட்டு, வேறு ஒரு சர்வே எண்ணை கிரை யம் செய்து கொடுத்து விடுகின்ற னர். இப்படி பல்வேறு மோசடிகளுக் கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகை யில் தமிழக அரசு பல்வேறு நில சீர் திருத்த நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.
சர்வே எண் மூலம் அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது, எவ்வ ளவு பரப்பளவில் இருக்கிறது. அதற்கான வரைபடம் என அனைத்து விஷயங்களும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகை யில் ஒரு தனி இணையதள வசதி செய்யப்பட்டு உள்ளது.
சர்வே எண்கள் விற்பனைக்கு தடை
அதே போல் அரசு நிலங்கள், கோவில் நிலங்கள், நீர் நிலை மற் றும் வனப் பகுதிகள் நிலங்கள் ஆகி யவற்றில் போலி விற்பனையை தடுக்கும் வகையில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அந்த சர்வே எண்கள் விற்பனைக்கு தடை போடப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து நில மோச டிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக் கும் வகையில் தமிழக அரசு, தமிழ் நிலம் திட்டத்தின் கீழ் <https://tngis.tn.gov.in/apps/village- dashboard/படம்>: என்ற வில் லேஜ் மாஸ்டர் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் மேப் போன்று அதில் உள்ள வரைபடம் மூலம் நமது வீடு, நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை மிக எளிமை யாக தெரிந்து கொள்ளலாம். பின் னர் அந்த சர்வே எண்ணை https: //eservices.tn. gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர், நில அளவுகள் மற்றும் நிலத்தின் தன் மைகளை அறிந்து கொள்ளலாம்.
தற்போது இந்த வில்ஜேஜ் மாஸ்டர் இணையத்தில் கிராமங்க ளில் உள்ள வீடு மற்றும் நிலங்க ளின் சர்வே எண்ணை மட்டுமே தெரிந்து கொள்ளும் வசதி இருக்கி றது. நகர்ப்புறங்களுக்கு இந்த திட்டம் கொண்டுவரப்படவில்லை. ஆனால் நகர்ப்புறங்களுக்கும் கொண்டு வந்தால் நில மோசடிகள் என்பது முற்றிலும் தடுக்கப்பட்டு விடும்.
446 கோடி சர்வே எண்கள்
தமிழகத்தில் மட்டும் பத்திரப் பதிவு துறையின் கணக்கீட்டின் படி சுமார் 446 கோடி சர்வே எண்கள் உள்ளன. அதில் வில்லேஜ் மாஸ் டர் இணையதளத்தில் கிராமப்புறங் களில் இருக்கும் சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள் இப் போது மட்டும் கொடுக்கப்பட்டுள் ளன.
அதுமட்டுமின்றி, வில்லேஜ் மாஸ்டரில் நகர் பகுதி, கிராம பகுதி என தனித்தனியாக பிரித்து காண் பிக்கப்படுகிறது. மேலும் அதில் வனப்பகுதி, தீவுகள், மலைகள் ஆகிய இடங்கள் குறித்து விவ ரங்களையும் தெரிந்து கொள்ள லாம். உங்களுக்கு சர்வே எண் தெரிந்து இருந்தால் வில்லேஜ் மாஸ்டரின் இடத்தின் எல்லை மற்றும் அருகில் உள்ள இடங்கள் விவரங்களையும் அறிந்து கொள்ள லாம்.
ஜி.பி.எஸ். வசதி வேண்டும்
கூகுள் மேப் போல் இருக்கும் வில்லேஜ் மாஸ்டர் வரைபடத்தில் நமது இடத்தை முதலில் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அதன் மூலம் நமது சர்வே எண்ணை தெரிந்து கொள்ளலாம். அதனை இன்னும் எளிதாக்க வேண்டியுள் ளது. அதாவது கூகுள் மேப் மூலம் நாம் தெருவில் நிற்கிறோம், எந்த பகுதியில் இருக்கிறோம் என்ப தனை ஜி.பி.எஸ். மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
அதே போல், வில்லேஜ் மாஸ்ட ருக்கு என்று அரசு ஒரு தனி செயலி கொண்டு வர வேண்டும். அதில் ஜி.பி.எஸ்.வசதியை ஏற்படுத்திக் கொடுத்து, அதன் மூலம் நாம் நிற்கும் இடத்தின் சர்வே எண்ணை எளிதாக தெரிந்து கொள்ளும் வச தியை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் போலி சர்வே எண் ணில் நடைபெறும் மோசடிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.