tamilnadu

img

குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு: டி.ஆர்.பாலு வாக்குறுதி

அம்பத்தூர், ஏப். 3-


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அம்பத்தூர் பகுதியில் திருமங்கலம், பாடி குப்பம், முகப்பேர் கிழக்கு, ஒளவைநகர், பாடி, தேவர் நகர்,ஆபிசர்ஸ் காலனி உள்ளிட்டபகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ஆவடி ரயில்நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி செல்ல தனி பாதை அமைத்து ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருமங்கலம் முதல் ஆவடி வரை மெட்ரோரயில் சேவை தொடர நடவடிக்கை எடுக்கப்படும். முகப்பேர் கிழக்குப் பகுதியில் தாபால் நிலையம் அமைக்கப்படும். குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். அம்பத்தூர் பகுதியில் கலைக்கல்லூரி அமைக்கப்படும்’ என வாக்குறுதி அளித்தார்.இதில் தொகுதி செயலாளர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், ஜோசப்சாமுவேல், ஆர்.டீக்கா, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி செயலாளர் சு.பால்சாமி, சு.லெனின்சுந்தர், கே.ரவிச்சந்திரன், பாக்கியம்பிள்ளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன், தொகுதி செயலாளர் மனோகரன், மதிமுக தொகுதி பொருப்பாளர் தாமோதரன், நல்லையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;