“பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவிலோ அல்லது வேறு ஏதாவது 5 ஆண்டுக்கு முன் செயல்படுத்திய திட்டங்களின் நிறைவு விழாவிலோ பங்கேற்க தமிழகம் வந்தால் மகிழ்ச்சி. அவரது கட்சி நிகழ்வில் (என் மண் என் மக்கள்) பங்கேற்க வருகிறார். 9 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அடிக்கல் நாட்ட கிளம்பியுள்ளார். தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார். மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.