விழுப்புரம், செப்.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றிய மாநாடு ஏ.கிருஷ்ணமூர்த்தி,பி.கலியமூர்த்தி, எஸ்.அமுதா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ், சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினர். இம்மாநாட்டில், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்கிரவாண்டியை மையப்படுத்தி தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும்,விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், தினந்தோறும் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் மருத்துவர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் அனைத்து பாசஞ்சர் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். 11 பேர் கொண்ட விக்கிரவாண்டி ஒன்றிய குழுவின் செயலாளராக ஆர்.கிருஷ்ணராஜ் தேர்வு செய்யப்பட்டார்.